இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்னம் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மணிரத்னம் ” ஆர்.ஆர்.ஆர் திரைபடம் ஆஸ்கார் விருது வென்றது பெருமையான விசயம் தான். பொன்னியின் செல்வன் படத்தை ஆஸ்கார் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.
பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வன் படத்தை போன்று வரலாற்று படங்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது என நான் நம்புகிறேன். கல்கியின் நாவலை திரையில் காட்டவில்லை கல்கி என்ன எழுதினாரோ அதை வைத்து தான் படம் எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…