biggboss 3: வனிதா அக்கா வந்து ஒரு வார்த்தை சொன்னதும் நீங்க பொங்கி எழுந்துருவிங்க! பொறுத்தது போதுமென பொங்கி எழுந்த லொஸ்லியா?

Published by
லீனா

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியானது, 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இவர் இந்த வீட்ற்குள் வந்த உடனே கலவரம் ஆரம்பமானது. இவரது முதல் இலக்கே அபிராமி – முகன் காதல் தான். அபிராமியிடம் முகனை பற்றி வெளியில் நடத்த விடயங்கள் எல்லாவற்றையும் சொல்லி, இருவருக்கும் இடையே வன்முறையை தூண்டி விட்டுள்ளார்.

இந்நிலையில், வனிதாவின் வார்த்தையை கேட்டு, மதுமிதாவும், அங்குள்ள ஆண்களை மிகவும் மோசமான நிலையில் திட்டியுள்ளார். இதனையடுத்து, கவினுக்கு மதுமிதாவுக்கு இடையே மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது.

கவின் மதுமிதாவிடம், வீட்டில் உள்ள எல்லா ஆம்பளைகளும், பொம்பிளைகளை யூஸ் பண்ணுறது சொன்னிங்களே, அதுக்கு தான் சொல்றேன் அடுத்தவங்க பிரச்சனைய நீங்க ஏன் யூஸ் பண்ணுறிங்கனு கேட்டேன். சேரன் அண்ணா யாரை யூஸ் பண்ணுனாரு என கேள்வி கேட்கிறார். உடனே மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனே அமைதியாக இருந்த நீ இப்ப எதற்காக பிரச்னை பண்ணுகிறாய் என கேட்கிறார்.

உடனே கவின், நீங்களும் இவ்வளவு நாளும், அமைதியாக தானே இருந்தீர்கள். வனிதா அக்கா வந்தவுடனே தானே இப்படி பிரச்னை பண்ணுகிறீர்கள் என கேட்கிறார். இதனையடுத்து கோபம் கொண்ட லொஸ்லியா, வனிதா அக்கா ஒரு வார்த்தை சொன்னதும் நீங்க பொங்கி எழுந்துருவிங்க, இவ்வளவு நாளும் நீங்க வேற்று கிரகத்துலயா இருந்தீங்க என கேட்கிறார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago