ஆண்டவர் இல்லாத பிக் பாஸ்.? ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.!

Published by
பால முருகன்

கமல்ஹாசன் : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் நம்மளுடைய நினைவுக்கு வருவது ஆண்டவர் கமல்ஹாசன் தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு மத்தியில் பிரபலமாக்கிய பெருமை கூட அவருக்கு தான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கலகலப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 7- சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. வழக்கம் போல இந்த 8-வது சீசனையும் நம்ம கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விலகியது குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில் கமல்ஹாசன் கூறியதாவது ” 7 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தொடங்கிய எங்கள் பிக் பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் என்றென்றும் நன்றி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை. தனிப்பட்ட முறையில்,  இந்த நிகழ்ச்சியில் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். அதைப்போல சில விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்.  அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.  நாங்கள் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ எனவும் சற்று உருக்கமாக அறிக்கையில் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், பலரும் நீங்கள் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி நன்றாக இருக்காது என்று கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

6 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

29 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

50 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

53 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago