Bigg Boss Tamil Season 7 [File Image]
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இப்பொது, எட்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் வைல்ட் கார்டு போட்டியாளரான கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். கடந்த வாரம் ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த வாரம் தொடக்க நாளிலியே வீட்டிற்குள் இருக்கும் எல்லா போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் அவர்கள் பெரிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அதாவது, இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வரவுள்ளனர்.
ஏற்கனவே, வீட்டிற்குள் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர். தற்போது, மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கவிருக்கும் நிலையில், உள்ளே இருக்கும் 14 போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.
இதில் வெற்றிபெற்றால், மட்டுமே அந்த மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வரமாட்டார்கள். ஆனால், இந்த போட்டியில் தோற்று போனால், புதிதாக மூன்று வைல்டு கார்டு நபர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்றும், தொற்று போன மூவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, கொடுக்கப்படும் மூன்று போட்டியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வெல்ல போகிறார்களா? இல்லை வெளியே இருந்து வரும் போட்டியாளர்களுக்கு வழிவிட போகிறார்களா? என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…