சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன் என்றும் பதிலளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வாரம் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஆரி வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளதாகவும் கணிப்புக்கள் கூறுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே வெளியேறிய, அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை புரிந்துள்ளனர். ஆனால், வேல்முருகன், சனம் செட்டி, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில், வரும் நாட்களில் அவர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, ட்வீட்டர் பக்கத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், நான் ஒருவன் மட்டும் தான் அழைக்கப்படாதவன் என்றும் பதிலளித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…