Bharathiraja and ivana [File Image]
Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள கள்வன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவானாவை பாரதிராஜா திட்டினாராம்.
அதும் சீரியஸ் ஆக எல்லாம் திட்டவில்லை ஜாலியாக திட்டி இருக்கிறார். ஒரு முறை ஷூட்டிங்கின் போது இவானா பாரதி ராஜாவை கண்டுகொள்ளாமல் போய்விட்டாராம். உடனடியாக ஏய் இங்க வா நான் யார் தெரியுமா என்ன நீ என்னை கண்டு கொள்ளலாமா போற? நான் யாருனு சொல்லுன்னு கேட்டாராம் அதற்கு இவானா சில நேரம் யோசித்து பாரதிராஜா என்று கூறினாராம்.
அவர் அப்படி மிரட்டிய அடுத்த நாளில் இருந்து இவானாவை எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் என்று கூறிவிடுவாராம். பாரதி ராஜா அன்று செல்லமாக மிரட்டிய காரணத்தால் தான் இவானா பயந்து போய் பாரதிராஜாவிடம் பேசினாராம். இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜாவே ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…