நடிகர் ரஜினி அடுத்தாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை.
இதனால் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி , நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் 169-வது படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாம். அதைபோல் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியீட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நெல்சன் விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் படமும் ஏப்ரல் 14-ஆம் தேதி தான் வெளியாகவிருந்தது. ஆனால் கேஜிஎப் படம் வெளியானதால், பீஸ்ட் அதற்கு முன்தினம் 13-ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…