இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.
படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். பலர் பாசிட்டிவ் கருத்துக்களையும் பலர் நெகட்டிவ் கருத்துக்களையும் கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பீஸ்ட் விஜய் சிலை ஒன்று 4 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் எலக்ட்ரிக் நிறுவனம் இந்த சிலையை வைத்துள்ளது.
இந்த சிலை வைத்து குறித்து பேசிய நிறுவனத்தின் உரிமையாளர் பாலாசிங் “விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெற்றிபெறவும் வாடிக்கையாளர்களை கவரவும் இந்த சிலை வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…