இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.
படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். பலர் பாசிட்டிவ் கருத்துக்களையும் பலர் நெகட்டிவ் கருத்துக்களையும் கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பீஸ்ட் விஜய் சிலை ஒன்று 4 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் எலக்ட்ரிக் நிறுவனம் இந்த சிலையை வைத்துள்ளது.
இந்த சிலை வைத்து குறித்து பேசிய நிறுவனத்தின் உரிமையாளர் பாலாசிங் “விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெற்றிபெறவும் வாடிக்கையாளர்களை கவரவும் இந்த சிலை வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…