Categories: சினிமா

100 பேரை வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்த அஜித் குமார்!

Published by
பால முருகன்

சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் பலரும் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தும் கொடுத்தனர். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், kpy பாலா, சூர்யா, கார்த்தி, சூரி, விஷ்ணு விஷால் போன்ற பிரபலங்கள் எல்லாம் பணம் கொடுத்து உதவி செய்து இருந்தார்கள். இவர்கள் உதவி செய்தாலும் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எதுவும் உதவி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தது.

அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்.!

பிறகு நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிருந்தார். எனவே, தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் அவர் உதவிகளை செய்தார் என்று தெரிய வந்தது.

ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை! அஜித் செய்த உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்!

அவரை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் விஷ்ணு விஷால் அமீர்கான் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த செய்தியை அறிந்து அவர்களுடைய நலன் விசாரித்தார். இதனால் மக்கள் கண்கலக்கு தெரியவில்லையா? எனவும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக நடிகர் போஸ் வெங்கட் கூட மக்கள் எப்போதும் உங்க கண்களுக்கு தெரியப்போவது இல்லை என அஜித்தை விமர்சித்து கூறியிருந்தார்.

ஆனால், அஜித் சென்னையில் வந்த வெள்ளத்தின் போது 100 பேரை வீட்டில் தங்க வைத்து 3 நாட்கள் சாப்பாடு போட்டு அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000  வழங்கியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” பாராட்ட வேண்டும் என்றால் நடிகர் அஜித்தை பாராட்டலாம்.

வெள்ளம் வந்த பிறகு உடனடியாக ஒரு 100 பேரை நேரில் அழைத்து அவர்கள் அனைவரையும் தன்னுடைய வீட்டில் தங்கவைத்தார். தங்க வைத்து 3 நாட்களுக்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடும் கொடுத்தார். அது மட்டுமின்றி வீட்டில் இருந்து போகும் போது அந்த 100 பேருக்கும் ஒரு ஆளுக்கு 10,000 ரூபாய் பணமும் கொடுத்து உதவி செய்தார். அவர் செய்த உதவியை விளம்பரம் யாரும் செய்யவில்லை யாருக்கும் தெரியாமல் அஜித் உதவி செய்துள்ளார் ” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

25 minutes ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

2 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

3 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

4 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

4 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

5 hours ago