Categories: சினிமா

கலர் பட காஞ்சனா என்ன ஆனார் தெரியுமா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை காஞ்சனா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விமானத்தில் பணிபுரிந்து வந்தவர். பிறகு அந்த சமயமே பார்ப்பதற்கு அழகாக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு காஞ்சனாவின் சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது என்றே கூறலாம்.

ஏனென்றால், இந்த திரைப்படத்திற்கு பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை, கொடிமலர், பாமா விஜயம், பொன்னு மாப்பிள்ளை, சிவந்த மண், விளையாட்டுப் பிள்ளை, அவளுகென்று ஓர் மனம், நியாயம் கேட்கிறோம், நினைவில் ஒரு மலர் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.கருப்பு- வெள்ளை படங்களை தொடர்ந்து கலர் படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருந்தார்.

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!

1970, 80 காலகட்டத்தில் எல்லாம்  இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக இவருக்கு அந்த சமயம் கலர் பட கஞ்சனா என்ற பெயரும் வந்தது. பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தவுடன் என்ன ஆனார் என்றே தெரியாமல் சினிமாவை விட்டே சற்று விலகிவிட்டார்.

இந்நிலையில், காஞ்சனா என்ன ஆனார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்  பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” கலர் பட காஞ்சனா அந்த சமயத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். கோடி கணக்கில் இவருக்கு சொத்து இருந்தது.

அந்த சொத்துக்கள் அனைத்தையும் அவருடைய சொந்த காரர்கள் ஏமாற்றி வாங்கிவிட்டார்கள். பிறகு பணத்தை இழந்த காஞ்சனா கோவில்களில் சமூக சேவை செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார். திருமணம் செய்து கொண்ட போதிலும் அவருக்கு பெரிதாக திருமண வாழ்கை கைகொடுக்கவில்லை. இப்போது தன்னிடம் இருக்கும் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்து விட்டு திருப்பதியில் பெண் சாமியாராக வாழ்கிறார்” எனவும் நடிகை காஞ்சனா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Recent Posts

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

32 minutes ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

55 minutes ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

1 hour ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…

2 hours ago

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

11 hours ago