அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

bayilvan ranganathan aditi shankar

பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கர் ஒருபக்கம் சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர் படங்களில் ஹீரோயினாகி நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா துறையில் ஆர்வம் காட்டவில்லை படிப்பில் அதிகம் கவனம் இருந்த காரணத்தால் அப்படியே சினிமாவுக்கு வராமல் திருமணம் செய்துவிட்டு திருமண வாழ்க்கையிலும் இணையப்போகிறார்.

Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் திருமணம் செய்துகொண்டு வாழ்வில் செட்டில் ஆகப்போகும் நிலையில், அவருடைய தங்கை அதிதி ஷங்கர் சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்ட காரணத்தால் தான் இனிமேல் படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் முடிவு எடுத்து இருக்கிறாராம்.

Read more- துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் – விஜய்…களைகட்ட போகும் திரையரங்கம்.!

திருணம் குறித்த பேச்சு எடுத்தாலே தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று அதிதி ஷங்கர்  அடம் பிடிக்கிறாராம். இந்த தகவலை பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நடிகை அதிதி ஷங்கர் படிப்பில் ஆர்வம் காட்டி மருத்துவர் பட்டம் வாங்கிவிட்டார்.

Read more- வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

இப்போது சினிமா துறையில் இப்போது அதிதி ஷங்கர் 3 படங்கள் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அவர் நடிக்க கமிட் ஆகி இருக்கும் படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிதி ஷங்கர் இப்போது திருமணம் செய்துகொள்ள எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால், அவருடைய அக்கா திருமணம் செய்துகொள்ளவுள்ளார். அதிதி சினிமா மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார்” என பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்