நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் அடுத்த பாடல் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயன் மேல பொறாமை சீமராஜா தோல்விக்கு இதுதான் காரணம்…பொன்ராம் ஓபன் டாக்.!
இந்த நிலையில், இயக்குனர் எச்.வினோத் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் துணிவு படம் வெளியாகும் தினத்தில் தான் சபரிமலையில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” துணிவு திரைப்படம் வெளியாகும் தினத்தில் நான் இங்கு இருக்க வாய்ப்பு இல்லை.
நான் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோட்டிருக்கிறேன். எனவே படம் வெளியாகும் தினத்தில் நான் சபரி மலையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது” என கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் துணிவு மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்டு வாருங்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…