சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ செய்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் சுதந்திர தின விழா பற்றி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தியின் வரிகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” என்று ஒரு பெண் இரவில் சுதந்திரமாக சாலையில் நடக்க முடிகிறதோ, அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம்” என ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அவருடைய அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கடந்த (ஜூலை-9) அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவனமயில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு தான் இயக்குனர் அட்லீ இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…