என்ன சொல்ல போகிறாய் பட விழாவில் பட நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலமாகவும், சில ஆல்பம் பாடல்கள் மூலமும் பிரபலமானவர் அஸ்வின். இவர் முதன் முதலாக பெரிய திரையில் நடித்து வெளியாக ரெடியாகி இருந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.
அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் பெரும் சர்ச்சைகளானது. அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமளித்திருந்தார்.
ஆனாலும் தற்போது வரையில் நெட்டிசன்கள் விடுவதாயில்லை. 40 கதை அஸ்வின் என வாட்டி வதைத்து வருகின்றனர். இதனை பார்த்த தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸ் பிளானை மாற்றிவிட்டனராம்.
முதலில் இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிட முடிவுஎடுத்து இருந்தாராம். அதனால், தான் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். ஆனால், நெட்டிசன்கள் மத்தியில் அஸ்வினுக்கு எதிராக கருத்து நிலவி வருவதால், படத்தின் ரிலீஸை டிசம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரிக்கு தள்ளிவைத்து விட்டனராம்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…