கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்! விட்டு விலக முடிவு செய்த மனைவி?

Published by
பால முருகன்

தர்ஷன் : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது ஆகி இருக்கும் நிலையில், அவரை விட்டு அவருடைய மனைவி விஜயலட்சுமி விலகி செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கைது செய்து விசாரணை செய்த போது சடலமாக இருந்தது சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்றும் அவர் தர்ஷனின் ரசிகர் மன்ற தலைவைர் எனவும் ,  கூலிப்படையை ஏவி நடிகர் தர்ஷன் அவரை கொலை செய்ததாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏனென்றால், தர்ஷன் நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். ஏற்கனவே,  தர்ஷனுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியும் கூட பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக பழகி வருவது இதனால் தர்ஷன் விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பிரச்சனையும் ஏற்பட்டு வந்து இருக்கிறது. இதுவே ஒரு சர்ச்சையாகவும் பலமுறை வெடித்து இருக்கிறது.

இந்த சூழலில், தர்ஷனுக்கு விஜயலட்சுமிக்கு இடையே பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்து கொலையான தர்ஷனின் தீவிர ரசிகர் ரேணுகாசாமி  பவித்ரா கவுடாவின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமாக திட்டி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனை பவித்ரா கவுடா தர்ஷனிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தர்ஷன் ரேணுகாசாமியை நேரில் அழைத்து பேச முடிவெடுத்துள்ளார்.

பின் கடந்த 8-ந் தேதி இரவு காரில்  ரேணுகாசாமி அழைத்து வரும் படி, ராகவேந்திரா என்பவரிடம் தர்ஷன் கூற,  உடனே அவர் சென்று வினய் என்பவருக்கு சொந்தமான பழைய கார் குடோன் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு சிலரை வைத்து ரேணுகாசாமியை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கைதாகி இருக்கும் 11 பேர் கொடுத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் தர்சனையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருக்கும் நிலையில், அவரை  விட்டு மனைவி விஜயலட்சுமி விலக முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முன்னதாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்த நிலையில், அது அனைத்தையும் நீக்கி உள்ளார். எனவே, தர்ஷனை விவாகரத்து செய்ய அவர் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதனை பற்றி அவர் விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

57 minutes ago

இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த ‘ஜன கன மன..,’ குழம்பிய ஆஸி. வீரர்கள்!

லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…

2 hours ago

ச்சீ, இதுதான் காரணமா? எலான் மஸ்க் மகனால் டிரம்ப் அலுவலகத்திற்கு புதிய மேஜை?

வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…

3 hours ago

காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!

சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…

4 hours ago

AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…

5 hours ago

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

7 hours ago