நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

Published by
பால முருகன்

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனத்தை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படம் சந்தானத்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படங்களுக்கான சிறிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, அடுத்ததாக நடிகர் சந்தானம் காமெடி கலந்த பெய் படம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். அது தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகமாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறதாம். தில்லுக்கு துட்டு முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகம் எப்படி காமெடி கலந்த கதையம்சத்தை கொண்ட படமாக இருக்குமோ அதே அளவிற்கு ஒரு நல்ல படமாக அதனுடைய அடுத்த பாகமும் இருக்குமாம்.

இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யா தான் நல்ல ஒரு பட்ஜெட்டில் தயாரிக்கவும் இருக்கிறாராம். அந்த படத்தை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக தன்னை வைத்து வடக்குப்படி ராமசாமி என்ற பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். இந்த படத்தையும் நடிகர் ஆர்யா தான் தயாரிக்கிறாராம்.

முதலில் தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க சந்தானம் திட்டமிட்டு இருக்கிறராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறதாம். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறாராம்.  இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

சந்தானத்திற்கும் ஆர்யாவிற்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் இணைந்தே ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களில் நடித்து வந்து இருக்கிறாரகள். எனவே ஆர்யா தனது நண்பர் ஆர்யாவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சந்தானத்திற்கு மார்க்கெட் தற்போது நன்றாக இருப்பதால் கண்டிப்பாக ஆர்யா அவரை வைத்து தயாரிக்கும் படத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

29 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

57 minutes ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

2 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

9 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

13 hours ago