ayalaan 2 [File Image]
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் திரைப்படம் அயலான். இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது அயலான் படத்தை தயாரித்த பாண்டம் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அயலான் 2 குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. “அயலான்” படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர்களை KJR ஸ்டுடியோவில் மீண்டும் இணைக்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அமைச்சர் ஜீவன் செம ஸ்மார்ட்! புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
“அயலான் 2″க்கான தயாரிப்பு தயாராகி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் படைப்பாற்றல், ரவிக்குமாரின் இயக்குனர் நுணுக்கம் மற்றும் PhantomFX இலிருந்து அற்புதமான VFX & CGI ஆகியவற்றைக் கலக்கும் ஒரு அசாதாரண காட்சியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
“அயலான் 2′ படத்தின் ஒத்துழைப்பு இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. அயலான்’ படத்தின் வெற்றி களம் அமைத்துள்ளதால், அதன் தொடர்ச்சியின் மூலம் அதை மேலும் உயர்த்துவதில் உறுதியாக உள்ளோம். கண்டிப்பாக அயலான் 2 வரும்” எனவும் அறிவித்துள்ளார்கள்.
அயலான் 2 படம் குறித்து கூடுதல் தகவல் என்னவென்றால், அயலான் படத்தின் VFX காட்சிகளுக்காக மட்டுமே படக்குழு 50 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தையும் கைவசம் வைத்துள்ளார். எனவே, தான் கமிட் ஆகி இருக்கும் படங்களை எல்லாம் முடித்த பிறகு அயலான் 2 படத்தில் நடிக்க கமிட் ஆவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…