Categories: சினிமா

என் மகனை வச்சு என்ன பண்ற? அமீரிடம் பதறி போன சிவகுமார்.!

Published by
பால முருகன்

பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு சசிகுமார், சினேகன், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பிறகு ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கையையும் வெளியீட்டு இருந்தார்.

அந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், பருத்திவீரன் பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் இயக்sivakumarகுனர் அமீர் பேசி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்த அமீர் பருத்திவீரன் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகுமார் வந்ததை பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் “பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது ஒரே ஒரு நாள் மட்டும் தான் வந்து பார்த்தார். அவர் வந்த அன்று தான் கார்த்தியை மரத்தில் படுக்கை வைத்து ஒரு காட்சி ஒன்றை எடுத்துக்கொண்டு இருந்தேன். சரியாக அந்த சமயம் சிவகுமார் சார் படப்பிடிப்புக்கு வந்தார். வந்து பார்த்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.

ஏனென்றால், கார்த்தி மரத்தில் இருந்ததை பார்த்துவிட்டு என்னிடம் சிவகுமார் சார் என்னடா என் மகனை பண்ணிக்கிட்டு இருக்க? என்று கேட்டார்.  அதற்கு நான் இல்ல சார் அது படத்தில் வரும் ஒரு காட்சி அதனால் தான் அந்த காட்சியை எடுத்துக்கொண்டு இருந்தேன் என்று கூறினேன். அப்போது காட்சியை முடித்துவிட்டு ஒதுங்க கூட இடமில்லை.

படப்பிடிப்பில் ஒரே ஒரு கூடாரம் போன்று போட்டு கொண்டு வெயிலை தாங்கமுடியவில்லை என்றால் அதற்குள் போய் நின்றுக்கொள்வோம். ஒரே ஒரு நாள் மட்டும் தான் சிவகுமார் சார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அதன் பிறகு ஒரு நாள் கூட வரவே இல்லை” என அமீர் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அமீர் ” சிவகுமாரை போல சூர்யாவும் ஒரே ஒரு நாள் தான் படப்பிடிப்பு வந்தார்.

சரியாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது மதுரையில் எடுக்கப்பட்டு வந்தது. அந்த சமயம் தான் சூர்யா வந்து படத்தின் படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்தார். அதைப்போல படம் எடுக்கப்பட்ட வரையில் முதலில் போட்டு காமிக்கப்பட்டது சூர்யாவுக்கு தான். அவரும் படத்தை பார்த்துவிட்டு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்”  எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

7 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

10 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

11 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

12 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

12 hours ago