சினிமா

சூர்யா இருக்காரு நான் நடிக்க மாட்டேன்! மௌனம் பேசியதே படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ?

Published by
பால முருகன்

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, நந்தா துரைராஜ் ஆகியோர் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. இந்த திரைப்படத்தில் திரிஷா, நேஹா பென்ட்சே, அமீர், விதார்த், அஞ்சு மகேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகள் எல்லாம் அந்த சமயம் இளைஞர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஆனால், முதலில் இந்த படத்தின் கதையை இயக்குனர் அமீர்  வேறுமாதிரி வைத்திருந்தாராம்.

நீ ஜெயிச்சிட்ட மாறா! முதன் முறையாக கார்த்தியை கட்டிப்பிடித்த சூர்யா…எதற்காக தெரியுமா?

கிட்டத்தட்ட இரண்டு ஹீரோக்கள் வைத்து படம் நகர்வது போல வைத்திருந்தாராம். ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், மற்றோரு கதாபாத்திரத்தில் அருண் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம். முதலில் படத்தின் கதையை இயக்குனர் அமீர் அருண் விஜய்யிடம் கூறினாராம். கதையை கேட்டவுடன் அருண் விஜய் நடிக்கவே யோசித்தாராம்.

அதற்கு காரணமே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு முக்கியத்துவம் இருந்தது தான். படத்தின் கதையை கேட்டவுடன் நான் நடிக்கவில்லை கதையை கேட்கும்போதே படத்தில் சூர்யாவுக்கு தான் முக்கியதுவம் இருப்பது போல் தெரிகிறது. எனவே, நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று அருண் விஜய் இயக்குனர் அமீரிடம் கூறிவிட்டாராம்.

இந்த தகவலை இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும், மௌனம் பேசியதே படத்தில் அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு இன்னும் அந்த சமயம் பட வாய்ப்புகள் குவிந்து இருக்கும். அருண் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்தபிறகு படத்தின் கதையை அமீர் நந்தா துரைராஜிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்தவுடன் அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்கவும் செய்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது.

Published by
பால முருகன்

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

21 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

25 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

39 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

51 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago