புஷ்பா 2 ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை! நீதிமன்றம் உத்தரவு!
புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் திரையரங்கில் ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கானா போலீசால் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது நீதிமன்றம்.

ஹைதிராபாத் : கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது, அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதிராபாத் சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது.
அப்போது, அதிகாலை சிறப்பு காட்சிக்கு தனது குழந்தைகளுடன் வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார் . ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர் உள்ளிட்டோர் கைதான நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த சிக்கட்பள்ளி போலீசார் அவரை, நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
பிரபல நடிகர், திரையரங்கில் நடந்த அசம்பாவித சமபத்திற்காக கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025