சினிமா

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?

Published by
பால முருகன்

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார்.

அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூற அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போன காரணத்தால் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போதே அவர் அஜித் கிட்ட ஒரு கதை கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனவே, அந்த கதை தான் அஜித்தின் 63-வது திரைப்படமாக உருவாகலாம் என தெரிகிறது. அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு தனது 63-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு தகவல் என்னவென்றால், அஜித் சம்பளம் தான்.

ஏனென்றால், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு சம்பளமாக 163 கோடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு 150 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில்,தற்போது அஜித் சம்பளத்தை உயர்த்தி கேட்டிருக்கிறாராம்.

சம்பளத்தை உயர்த்தி கேட்டதும் படத்தை தயாரிக்கும்   ஆர்எஸ்இன்ஃபோ டெயின்மென்ட்  உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளதாம். எனவே, இந்த படத்திற்காக அஜித்திற்கு சம்பளமாக 163 கோடி கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான தகவல் ஒரு பக்கம் பரவி வரும் நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பேட்டி ஒன்றில் ” இப்போது பரவும் தகவல் உண்மையாக இருந்தாலும் தற்போது படம் பேச்சுவார்தையில் தான் இருக்கிறது. முடிந்த பிறகு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

2 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

3 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

4 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

5 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

6 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

7 hours ago