ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வீதம் வேகவேகமாக நடைபெற்று வருகிறதாம்.
காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, கா.பெ.ரணசிங்கம் என தனது நடிப்பு திறனை காட்டும் திரைப்படங்களையும் கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக OTT தளங்களில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம், டிரைவர் ஜமுனா என ஒரு சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இது போக, ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க சென்னை திருவல்லிகேனி பகுதியில் ஒரு குடும்ப விழாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம்.
அந்த கதை மீது அதீத நம்பிக்கையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறாராம். அதனால், பட ஷூட்டிங் நேரம் பற்றி கவலைப்படுவதில்லையாம். ஒரு நாளைக்கு 17 மணி நேரம் ஆனால் கூட இருந்து நடித்து கொடுத்துதான் போகிறாராம். இந்த படம் வெளியானால் தனது மார்க்கெட் நல்ல ஏற்றம் பெரும் என கூறிவருகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…