kalki 2898 ad [file image]
கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 190 கோடி வரை வசூல் செய்து இருந்தது.
இந்நிலையில், கல்கி படத்தை பார்த்துவிட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்களும் விமர்சனங்களை தெரிவித்துவிட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
படம் பார்த்துவிட்டு அவர் கூறியிருப்பதாவது ” கல்கி படம் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார். அஸ்வினிதத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகாபடுகோன் மற்றும் #Kalki2898AD குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கிறேன்” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…