actor vijay [file image]
நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி நீண்ட நேரம் நடந்த நிலையில் ஒரு முறை கூட கீழே அமராமல் அங்கு வந்த அணைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை விஜய் வழங்கினார். ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் பெஞ்சை பிடித்துக்கொண்டு விஜய் நின்று கொண்டிருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கண்கலங்க வைத்தது என்றே கூறலாம்.
600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்!
இந்த நிலையில், 13 மணி நேரங்களுக்கு மேலாக மேடையில் நின்றுகொண்டே பரிசுகளை கொடுத்து வந்த விஜய் அடுத்த நாள் லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு காலை 7 மணிக்கு சென்றுவிட்டாராம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் முன்தினம் லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்தாராம். அப்போது நிகழ்ச்சிக்கு செல்வதை பற்றி விஜய் படக்குழுவிடம் பேசிக்கொண்டு இருந்தாராம்.
நான் மதியத்திற்குள் விழாவை முடித்துவிட்டு, மதியம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.. தாமதமானால் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று கூறினாராம். அதற்கு அடுத்த நாள் விழாவிற்கு வந்த விஜய் அடுத்த நாள் 13 மணிநேரம் மேடையில் இருந்த அவர் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்றார்.
எனவே, இவ்வளவு மணி நேரம் நின்ற அவர் அடுத்த நாள் ஓய்வு கேட்பார் என லியோ படக்குழு எதிர்பார்த்தார்களாம். ஆனால், அனைவர்க்கும் வியப்பூட்டும் விதமாக காலை 7 மணிக்கு சரியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டாராம். இந்த தகவலை லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…