அப்போ பிரைட் ரைஸ்.. இப்போ ‘இட்லி கடை’.! அடுத்த சம்பவத்திற்கு தயாரான தனுஷ்!

இப்படத்திற்கு "இட்லி கடை" என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘ராயன்’, ‘குபேரா’ படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும், அருண்விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் இப்படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் தனது மூன்றாவது இயக்குனர் திட்டமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் துவங்கியுள்ளார்.

அட ஆமாங்க… இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பாடல் காட்சியுடன் தேனியில் தொடங்கியுள்ளது. ஆம், கிட்டத்தட்ட பத்து நாட்கள் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அது மட்டும் இல்லாமல், தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படமான ‘D52’ படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கையில், அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு “இட்லி கடை” என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இப்படத்திற்கான இரண்டு பாடல்களை ஏற்கனவே முடித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தனுஷ் கடைசியாக, ராயன் படத்தில் நடித்திருந்தார். படத்தில் வட சென்னை கதை பாணியில் பிரைட் ரைஸ் கடை நடத்தி வரும் தனுஷ் எப்படி சம்பவத்தில் நுழைந்தாரோ.? D52 படத்தில் தேனியில் இட்லி கடை நடத்தும் தனுஷ் என்ன சம்பவம் செய்ய போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்