Vichithra [File Image]
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விசித்ரா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீ -எண்டரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொன்டு வருகிறார்கள். அந்த வகையில், விசித்ரா தன்னுடைய சினிமா வாழ்வில் மறக்க முடியாத விஷயம் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “2000-ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த போது தான் எனக்கு பிரச்சனையே தொடங்கியது.
அந்த நடிகர் கூட நடிச்சே ஆகணும்! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மிகப்பெரிய ஆசை!
அந்த படத்தினுடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மலம்புழாவில் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருந்தது. பிறகு 2001-ஆம் ஆண்டுக்கு பின் நான் சினிமாவை விட்டு காணாமல் போனேன். அதற்கு காரணம் சொல்ல என்னால் முடியவில்லை அந்த அளவுக்கு எனக்கு மன வருத்தமாக இருக்கிறது.
அதனை சொல்ல மறுத்த விசித்ரா வேறு கதை ஒன்றையும் கூறினார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க நான் கமிட் ஆகி இருந்தேன். அப்போது அங்கு பார்டி ஒன்று நடப்பதாக என்னை ஹோட்டலுக்கு அழைத்தார்கள். அங்கு நானும் சென்றேன். பிறகு அந்த ஹீரோவை நான் நேரில் சந்தித்தேன் என்னிடம் நீங்கள் படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டார்.
அதற்கு ஆமாம் நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அந்த நடிகர் என்னுடைய பெயரை கூட கேட்கவில்லை உடனடியாக என்னுடைய அறைக்கு வாருங்கள் என அழைத்தார். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டது நான் வேகமாக என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அவர் அப்படி பேசிய அடுத்த நாளில் இருந்து எனக்கு பிரச்சனை ஏற்பட தொடங்கியது. பலரும் தண்ணி அடித்துக்கொண்டு என்னுடைய ஹோட்டல் கதவை தட்டுவார்கள். தூங்கவே ரொம்ப பயமாக இருக்கும். இதனை என்னுடைய வாழ்வில் நான் மறக்கவே மாட்டேன்” எனவும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…