Simran : நடிகை சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அரண்மனை 4 படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடவுள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு வருகிறார். அவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்து சில ஆண்டுகள் ஆனாலும் கூட வருடைய நடிப்பு திறமை மற்றும் நடனம் ஆடும் எனர்ஜி இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றே சொல்லலாம்.
சமீபகாலமாக சிம்ரன் நடனம் செய்து அதற்கான வீடீயோவையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுக்கொண்டு வருகிறார். இருந்தாலும் சிம்ரன் ரசிகர்களுக்கு இருக்கும் கவலை என்றால் அவர் ஆல்தோட்ட பூபதி பாடலை போல் ஒரு படத்தில் பாடலுக்கு நடனம் ஆட மாட்டாரா என்று தான். அப்படி கவலைப்படும் ரசிகர்களுக்காகவே ஒரு உற்சாகமான செய்து வந்து இருக்கிறது.
அது என்ன செய்தி என்றால் சிம்ரன் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறாராம். இந்த பாடலில் நடிகை குஷ்பூவும் சிம்ரனுடன் இணைந்து நடனம் ஆடி இருக்கிறாராம். இவர்கள் இருவரும் ஆடி இருக்கும் இந்த பாடல் அரண்மனை 4 படம் முடிந்த பிறகு முடிவில் வருமாம்.
அரண்மனை 4 படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்து இருக்கிறார். எனவே, கண்டிப்பாக அந்த பாடல் குத்துப்பாடலாக தான் இருக்கும். குத்துப்பாடலில் சிம்ரனின் நடனம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்? கண்டிப்பாக அந்த பாடலை கேட்டுவிட்டு இளைஞர்கள் நடனம் ஆடாமல் இருக்கவே மாட்டார்கள். அந்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…