நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதி! விமர்சனங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

Published by
பால முருகன்

ஷாலினி : அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி மைனர் ஆப்ரேஷன் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மனைவி ஷாலினியை பார்க்க விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், நேற்று நடிகர் அஜித்குமார்சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து, இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  இருப்பினும், முன்னதாக, நடிகர் அஜித் தனது மனைவியை பார்க்க வரவில்லை அவர் படப்பிடிப்பில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது.

இதனால் அஜித் மீது எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த நிலையில், ஷாலினி தனது கணவர் அஜித் தன்னை கவனித்துக்கொள்வது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்துகொண்டு “என்றும் உன்னை காதலிப்பேன்” என்று அன்புடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அஜித் வரவில்லை என்பதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததற்கும்  முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மனைவி ஷாலினியை பார்க்க சென்னை வந்த அஜித்  மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்திருக்கும் நிலையில், இந்த படத்தில்  நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…

1 minute ago

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

1 hour ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

1 hour ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

2 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago