சினிமா

கதாநாயகியாக நடிக்க ஆசை இருக்கு! வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்…சஞ்சனா நடராஜன் எமோஷனல்!

Published by
பால முருகன்

நோட்டா , கேம் ஓவர் மற்றும் சர்ப்பட்ட பரம்பரை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். இவர் தனுஷிற்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். ஆனால், படம் முழுவதுமாக அவர் ஹீரோயினாக நடித்திருக்கமாட்டார். அவருடைய காட்சி கொஞ்சம் தான் வரும். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கூட பழங்குடிப் பெண்ணாக நடித்திருப்பார்.

படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சஞ்சனா நடராஜன் தனக்கு ஹீரோயினாக ஒரு முழு திரைப்படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும், அது தான் தன்னுடைய அடுத்த இலக்கு என மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை சஞ்சனா நடராஜன் ” நான் தற்போது தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறேன். ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி மற்றோரு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என தொடர்ச்சியாக நடிக்க கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், என்னுடைய ஆசை மற்றும் இலக்கு என்றால் ஒரு படத்தில் முழுவதுமாக கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்பது தான்.

கீர்த்தி சுரேஷிற்காக கணவனிடம் வாய்ப்பு கேட்ட அட்லீ மனைவி! தோழி மீது ரொம்ப பாசம் தான்!

அப்படி ஒரு பட வாய்ப்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என சற்று எமோஷனலாக சஞ்சனா நடராஜன் பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் பொதுவாகவே வேண்டுமென்றே ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகமாட்டேன். ஒரு படத்தின் கதையை கேட்பேன் அந்த கதையில் நான் நடிக்கவுள்ள கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கு என்பதையும் பார்ப்பேன்.

இதுவரை நான் தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாம் அப்படி தான். அதைப்போல இனிமேல் நடிக்க போகும் படங்களும் அப்படி தான் இருக்கும் ‘எனவும் நடிகை சஞ்சனா நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை சஞ்சனா நடராஜன் தற்போது மலையாளத்தில் ‘டிக்கி டாக்கா’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

31 minutes ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

2 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

5 hours ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

6 hours ago