Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்குக்கும், இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டனர். இந்த சூழலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிறுவன (Lakme Fashion Week 2024) ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது வித்தியாசமான ஆடைகள் அணிந்து ராம் வாக் செய்து நிகழ்ச்சியை அலங்கரித்தார்.
இந்த நிகழ்வின்போது பிரபல ஊடக ஒன்றுக்கு ரகுல் ப்ரீத் சிங் நேர்காணல் கொடுத்தார். அப்போது, திருமணத்திற்கு பிறகு வித்தியாசமான உடைகளை அணியுமாறு, உங்கள் குடும்பத்தினர் அறிவுறுத்தினார்களா என்று ரகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, “அப்படி எல்லாம் எதுவுமே இல்லை.
இந்திய சமூகத்தில் நாம் திருமணத்தில் ஒரு ஒப்பந்தம் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன், இது எல்லாரது வாழ்க்கையிலும் இயல்பான ஒரூ விஷயம் தான். திருமணத்திற்குப் பிறகு ஒரு பையனை இது போல குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என்று சொல்வீர்களா ? இல்லை, சரியா ?. இப்போது, காலம் மாறிவிட்டது ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானதை செய்ய தொடங்கிவிட்டனர். அதன் படி பார்க்கையில் எனது இரண்டு குடும்பங்களாலும் நான் மிகவும் ஆசீர்வதிக்கபட்டவள்.” என்று பிரபல ஊடகத்திற்கு நேர்காணலில் அவர் கூறி இருந்தார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…