Categories: சினிமா

லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் நடிகை நயன்தாரா. இவர் 16-ஆண்டுகளாக சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கிறார். ஒரு பெரிய நடிகருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கடந்து திருமணம் முடிந்து நயன்தாரா முன்னனணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து நீண்ட மாதங்களுக்கு பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தும் அன்னபூரணி படம் பற்றியும் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் பேசிய நயன்தாரா ” எனக்கு இந்த அன்னபூரணி படம் ரொம்பவே ஸ்பெஷலான படம்.

வெள்ள நிவாரணத்திலும் பிசினஸ் முக்கியமா? உதவி செய்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

என்னுடைய 75-வது படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஜா ராணி படத்திற்கு பிறகு நானும் ஜெய் மற்றும் சத்யாராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளேன். எனக்கு சினிமா துறையில் அப்பா என்றால் சத்யராஜ் சார் தான். எனக்கு அவரை அந்த அளவிற்கு பிடிக்கும். அதைப்போலவே ஜெய் கும் எனக்கு நல்ல பிரண்ட்ஷிப் உள்ளது. அவருடன் நான் ராஜா ராணி படத்தில் நடிக்கும் போது பழகும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் நாங்கள் நடித்த காட்சிகள் கொஞ்சம் தான் ஆனால் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது”எனவும் நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் பேசினார். இது குறித்தும் பேசிய அவர் ” ப்ளீஸ் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடாதீங்க நிறைய பேர் இப்படி சொல்வதால் என்னை திட்டுகிறார்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் என்னை 10 பேர் பாராட்டினால் பலர் என்னை திட்றாங்க. எனவ, இதன் காரணமாக தான் இந்த முறை அன்னபூரணி படத்தில் என்னுடைய பெயரில் கூட லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் போட வேண்டாம் என்று கூறினேன். ஆனால், எனக்கே தெரியாமல் படத்தில் என்னுடைய பெயரில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டு வைத்து இருக்கிறார்கள்” எனவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago