Mahima Nambiar [file image]
2010ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த நடிகை மஹிமா நம்பியார், சாட்டை திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த சமயத்தில் மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் சிறிது பேசப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிதாக எதுவும் பேசப்படவில்லை.
பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 என சில திரைப்படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் திரைப்படத்திலும், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அசுரகுரு படத்திலும் ஜோடியாக நடித்தார். இதன் பிறகும் சரியாக படப்பிடிப்புகள் அவருக்கு வரவில்லை.
கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவர் போட்டோ சூட் எடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரோஸ் நிற மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. இதைத்தொடர்ந்து தற்பொழுதும் சில கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் மேலே பச்சை நிறத்திலும் கீழே ரோஸ் நிறத்திலும் இருக்கமான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது பார்வை அனைவரும் கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்களாலேயே கொள்கிறார், தேவதை என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மஹிமா நம்பியார் ‘நாடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…