Losliya about kavin marriage [File Image]
டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இவர் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது என்றே கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
பிறகு தனிப்பட்ட சில கரணங்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லாஸ்லியா கவின் திருமணம் பற்றியும் அவருடைய வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கவினுக்கு திருமணம் முடிந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதைப்போல அவர் தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வருவதை பார்க்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகராக வளர்ந்து வருவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் முன்பு நடந்த விஷயங்களை வைத்து சேர்த்து வைத்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.
அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் பழசை போட்டு இப்போது இருக்கும் வாழ்க்கையுடன் சேர்த்து பேசுவது என்னை இதுவரை பாதிக்கவில்லை அவரையும் அது பாதித்திருக்காது என்று நான் நம்புகிறேன்.
எனக்கு இதை பற்றி எந்த கவலையும் இல்லை அவர் சந்தோசமாக இருக்கிறார் நானும் சந்தோசமாக இருக்கிறேன்” எனவும் நடிகை லாஸ்லியா தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் கவின் மோனிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார். இவர் கவினுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவராம். இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…