ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை பாவனா.
பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இன்று பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில், இணையபக்கங்களில் போலியான கணக்குகள் தொடங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், குஷ்பூ, சோபனா, அனுபமா, சுவாதி போன்ற நடிகைகளின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகையான பாவனாவின் பெயரிலும் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளனர். நான் முகநூலில் இணையவில்லை. எனவே, ரசிகர்கள் எனது போலி கணக்கை பின்தொடர வேண்டாம். இந்த போலி கணக்கு குறித்து புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க ரசிகர்களும் புகார் அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…