தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் முழுசம்பளம் வழங்கிய நடிகர் விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷால் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிற நிலையில், இந்த மூன்று படத்தையும் அவரே தயாரிக்கிறார். இவர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் எப்.ஐ.ஆர்., முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் செல்லா இயக்கும் படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, ஊரடங்கு உத்தரவால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணு விஷால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து முழு சம்பளம் கொடுத்து வருகிறார். 3 படங்களில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்கள், புரொடக்ஷன் துறையை சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார். இவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…