[Image source : freewalldownload]
தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் சந்தித்தார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அதேவேளையில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கங்களாக மாற்றி தனது ரசிகர் மன்ற நிவாகிகள் உதவியுடன், ரசிகர்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
ஏற்கனவே மக்கள் இயக்கங்கள் சார்பில், விலையில்லா உணவகம் என ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது, குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் கண்தானம் உள்ளிட்டவை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட நபர்களை விஜய் , தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களை பாராட்டியுள்ளார். மேலும், இம்மாதிரியான நலத்திட்டங்கள் செய்வதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் தருகிறேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார் நடிகர் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நின்று கணிசமான அளவில் வெற்றிகளை பெற்று உள்ளாட்சி உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். வெற்றி பெற்றவர்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…