மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான உல்லாஸ் பந்தளம் மனைவி ஆஷா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கவிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை காணவில்லை என உல்லாஸ் பந்தளம் காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, புழிக்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்த போலீஸார், வீட்டின் மாடி அறையில் ஆஷா இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். சடலத்தை மீட்டு அடூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆஷாவும் குழந்தைகளும் இரவில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் உல்லாஸ் இருந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்வவம் தற்போது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…