மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான்.. திடீரென நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published by
கெளதம்

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜூஹி சாவ்லா, “ஷாருக்கிற்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் இப்பொது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமாகி, இனித் வார இறுதியில் நடைபெறவிருக்கும் போட்டியில் விளையாடும்போது கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவார்” என கூறினார்.

ஷாருக்கானின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் இணையத்தில் வைரலாக தொடங்கியதும், அவரது ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். இதற்கிடையில், ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது ஷாருக்கான் ரசிகர்ளிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அது வேறொன்றும் இல்லை, மருத்துவமனை செல்லுவதற்கு முன், தன்னுடைய மாற்றுத் திறனாளி ரசிகரை சந்தித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஷாருக்கான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், தனது ரசிகரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை ஆவரது ரசிகர்கள் பெருமையுடன் புகழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள். 

Published by
கெளதம்

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

5 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

39 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago