Categories: சினிமா

பாலியல் புகார் …….நடிகை ராணி திடீர் வாபஸ்……காரணம் நடிகர் சங்கமா…???

Published by
kavitha

பிரபல  திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார்.
படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி புகார் அளித்தார்.இந்நிலையில்நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை  ராணி தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டது என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் அளித்த நடிகை ராணி சீரியலில் தனக்கு கணவராக நடிக்கும் சண்முகராஜன், காட்சிகளின் போது தவறான எண்ணத்துடன் தொடுவதாகவும், அடிப்பது போன்ற காட்சிகளில், உண்மையிலேயே தன்னை அடித்ததாகவும் புகார் கூறினார்.

இதுகுறித்து அவரிடம்கேட்டபோது தன்னையும், தனது கணவரையும் தாக்கியதாகவும் நடிகை ராணி செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் படப்பிடிப்பு சமயங்களில் தன்னுடன் உணவருந்த வருமாறும், தனியாக தங்க அழைத்ததாகவும் சண்முகராஜன் மீது அவர் பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த நிலையில் தனது தொலைக்காட்சி தொடர் நின்று விடக்கூடாது என்பதற்காக, சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார்.

இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளித்தார் அதில்படப்பிடிப்பின் போது நடிகை ராணியை அடித்தது உண்மைதான் ஆனால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுவது தவறு என்றும் மேலும் நடிகர் சங்கத்தின் மூலமாக இப்பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago