அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்துடன், இசையமைப்பாளர் அனிருத் நடனமாடினார்.

anirudh - raijni

சென்னை : ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான “மனசிலாயோ” பாடலுக்கு நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து vibe செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குநருடன் நடிகைகள் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் மேடையில் ஆடிய நடனம் அங்கு இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய ரஜினி அனிருத்தை புகழ்ந்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது, ” நான் ‘மன்னன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது ரவி ஒரு சிறுவனை அழைத்து வந்தார். அந்த சிறுவனை அங்கிருந்த சிம்மாசனத்தில் வைத்து ஃபோட்டோ எடுத்தேன்.

இன்று அனிருத் இசையென்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அவரின் இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் வேகமாக தீர்ந்துவிடுகின்றன. அனிருத் என் மகன் போல்” என்று ரஜினி பாசமழையை பொழிந்தார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குறித்து நானும் இயக்குனரும் பேசும்போது, இயக்குநர் என்னிடம் ‘100% அனிருத் தான் இப்படத்திற்கு வேண்டும் என்று சொன்னார். பதிலுக்கு நான் எனக்கு 1000% அனிருத்தான் வேண்டும் என்று சொன்னேன்.” இவ்வாறு  ரஜினி பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய அனிருத், “நான் இதுவரை இந்த மாதிரி படம் பண்ணதே இல்லை. ரொம்பவே வித்தியாசமான படம் இருக்கும் என்ற அவர், தலைவர் இந்த மாதிரி படம் பண்ணது சினிமாவுக்கு ரொம்ப நல்லது என்றார். மேலும் இந்தப் படத்தோட கதை நன்றாக இருக்கும். ‘ஜெய் பீம்’ படத்தோட மிகப்பெரிய ரசிகன்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “வேட்டையன் வழக்கமான தலைவர் படங்களை விட வேற ஜானர் படம். இதுல என்னால என்ன பெஸ்ட்டா பண்ணமுடியுமோ அதை நான் ட்ரை பண்ணிருக்கேன். இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்ல. தலைவர் இந்த மாதிரி படம் பண்ணது சினிமாவுக்கு ரொம்ப நல்லது” இவ்வாறு அனிருத் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்