சினிமா

ஹீரோயின்களுடன் பார்ட்டி! 1000 கோடி செலவு…சிரஞ்சீவியை விமர்சித்த மன்சூர் அலிகான்!

Published by
பால முருகன்

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ் பிரபலங்கள் முதல் தெலுங்கு பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி  த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசி மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

பிறகு இந்த விவகாரம் குறித்து எதிர்ப்பு மிகவும் அதிமாக எழுந்த நிலையில், நான் பேசியது தவறு தான் நான் பேசியது த்ரிஷாவை காயப்படுத்தி இருந்தது என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு த்ரிஷா தப்பு செய்வது மனிதம் மன்னிப்பது தெய்வீகம் என கூறியிருந்தார்.

சுத்தமா வரல எல்லாரும் கழுவி ஊத்துனாங்க! சோக கதையை சொன்ன ரோஷினி ஹரிப்ரியன்!

இந்த விவகாரம் அதனோடு முடிந்த நிலையில், தற்போது மன்சூர் அலிகான் சிரஞ்சீவி  குறித்து பரபரப்பான கருத்துக்களை சமீபத்தில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு வக்கிர புத்தி இருக்குன்னு சிரஞ்சீவி கூறினார். ஆனால் என்னை அப்படி கூறிவிட்டு அவர் என்ன பண்ணினார்? கட்சிக்காக 1000 கோடிகளை செலவு செய்தார். அதில் தான் ஹீரோயின்களுக்கு பார்டியும் வைக்கிறார். அந்த பணங்களை வைத்து ஏழைகளுக்கு கொஞ்சம் கூட உதவவில்லை.

அவருடைய தம்பி பவன் கல்யாணம் அப்படி தான் இவங்க எல்லாம் சேர்ந்து என்ன தான் பண்ணறாங்கன்னு தெரியல அந்த பணத்தை எல்லாம் தங்களுக்குத்தான் பயன்படுத்துறாங்க. சிரஞ்சீவி ஒவ்வொரு வருடமும் பழைய ஹீரோயின்களுக்கு விருந்து வைப்பார்.  ஹீரோயின்களுக்கு மட்டும் பார்ட்டி கொடுக்கிறார்.

அந்த மாதிரி பார்ட்டிகள் கொடுக்க அவருக்கு அது பிடிக்கும். ஆனால் என்மீது விமர்சனங்கள் வந்தபோது. என்னைக் கூப்பிட்டு உண்மையில் என்ன நடந்தது என்ன பிரச்சனை என்பதனை பற்றி கேட்டு இருக்கலாம். அப்படி கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  த்ரிஷா, குஷ்பு ஆகியோர் மீது ரூ. 10 கோடி, சிரஞ்சீவி மீது ரூ. 20 கோடி என அவதூறு வழக்கு போட போறேன். அப்போது பெறப்படும் அந்த பணம் தமிழகத்தில் குடிபோதையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்” எனவும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…

19 minutes ago

மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!

தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…

1 hour ago

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…

சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…

2 hours ago

NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!

ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…

2 hours ago

இயக்குநர் ஷங்கரை கண்கலங்க வைத்த ‘டிராகன்’ படத்தின் வசூல் செய்தது தெரியுமா?

சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…

2 hours ago