சினிமா

ஹீரோயின்களுடன் பார்ட்டி! 1000 கோடி செலவு…சிரஞ்சீவியை விமர்சித்த மன்சூர் அலிகான்!

Published by
பால முருகன்

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ் பிரபலங்கள் முதல் தெலுங்கு பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி  த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசி மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

பிறகு இந்த விவகாரம் குறித்து எதிர்ப்பு மிகவும் அதிமாக எழுந்த நிலையில், நான் பேசியது தவறு தான் நான் பேசியது த்ரிஷாவை காயப்படுத்தி இருந்தது என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு த்ரிஷா தப்பு செய்வது மனிதம் மன்னிப்பது தெய்வீகம் என கூறியிருந்தார்.

சுத்தமா வரல எல்லாரும் கழுவி ஊத்துனாங்க! சோக கதையை சொன்ன ரோஷினி ஹரிப்ரியன்!

இந்த விவகாரம் அதனோடு முடிந்த நிலையில், தற்போது மன்சூர் அலிகான் சிரஞ்சீவி  குறித்து பரபரப்பான கருத்துக்களை சமீபத்தில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு வக்கிர புத்தி இருக்குன்னு சிரஞ்சீவி கூறினார். ஆனால் என்னை அப்படி கூறிவிட்டு அவர் என்ன பண்ணினார்? கட்சிக்காக 1000 கோடிகளை செலவு செய்தார். அதில் தான் ஹீரோயின்களுக்கு பார்டியும் வைக்கிறார். அந்த பணங்களை வைத்து ஏழைகளுக்கு கொஞ்சம் கூட உதவவில்லை.

அவருடைய தம்பி பவன் கல்யாணம் அப்படி தான் இவங்க எல்லாம் சேர்ந்து என்ன தான் பண்ணறாங்கன்னு தெரியல அந்த பணத்தை எல்லாம் தங்களுக்குத்தான் பயன்படுத்துறாங்க. சிரஞ்சீவி ஒவ்வொரு வருடமும் பழைய ஹீரோயின்களுக்கு விருந்து வைப்பார்.  ஹீரோயின்களுக்கு மட்டும் பார்ட்டி கொடுக்கிறார்.

அந்த மாதிரி பார்ட்டிகள் கொடுக்க அவருக்கு அது பிடிக்கும். ஆனால் என்மீது விமர்சனங்கள் வந்தபோது. என்னைக் கூப்பிட்டு உண்மையில் என்ன நடந்தது என்ன பிரச்சனை என்பதனை பற்றி கேட்டு இருக்கலாம். அப்படி கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  த்ரிஷா, குஷ்பு ஆகியோர் மீது ரூ. 10 கோடி, சிரஞ்சீவி மீது ரூ. 20 கோடி என அவதூறு வழக்கு போட போறேன். அப்போது பெறப்படும் அந்த பணம் தமிழகத்தில் குடிபோதையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்” எனவும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Recent Posts

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

1 minute ago
அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

48 minutes ago
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

51 minutes ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

2 hours ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

3 hours ago