Categories: சினிமா

நடிகர் போண்டா மணிக்கு என்ன பிரச்சனை…எதனால் உயிரிழந்தார்.?

Published by
கெளதம்

பிரபல நகைச்சுவை தமிழ் நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. தற்பொழுது, போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கையை பூர்வீகமாகக் இவர் , பாக்யராஜ் இயக்கத்தில் 1991-ல் வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர், முத்து, முறை மாப்பிள்ளை, திருமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.. இவர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகளை எல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே கூறலாம். கடைசியாக இவர் நடித்த “வா வரலாம் வா” என்ற படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது.

குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்த ‘ஆறு’ படத்தின் காமெடி காட்சிகள் மற்றும் ‘கண்ணும் கண்ணும்’ திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த அடிச்சு கேட்டாலும் யாருகிட்டயும் சொல்லாதீங்க காமெடி காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் பேசப்பட்டது.  இப்படி பல காமெடி காட்சிகளில் நடித்து நம்மளை சிரிக்க வைத்த போண்டாமணி “எங்க வீட்டு மீனாட்சி” என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்து ஆண்டு 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், சிகிச்சைப் பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக, பணம் கேட்டு கண்ணீருடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாயினது. இதனை அடுத்து அவருக்குஅவருக்கு தனுஷ், விஜய்சேதுபதி, வடிவேலு, பார்த்திபன், மயில்சாமி உட்பட பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்தனர்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நேரில் சென்று நலம் விசாரித்ததுடன், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த போண்டா மணி நேற்று இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இவரது மறைவு இயற்கையான மரணம் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவிக்கப்பட்டாலும், சந்தேகத்தின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இப்போது, மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது என்றும், குரோம்பேட்டை நாகல்கேணி மின் தகனமேடையில் உடல் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

23 minutes ago
Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

60 minutes ago
Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

2 hours ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

2 hours ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

3 hours ago