Categories: சினிமா

Actor Babu: 30 வருடம் போராட்டம்! ‘என் உயிர் தோழன்’ நடிகர் பக்கவாத பாதிப்பால் காலமானார்!

Published by
கெளதம்

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘என் உயிர் தோழன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் பாபு, உடல்நலக்குறைவால் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனெவே, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருக்கும் தமிழ் திரையுலகதிற்கு, பழம்பெரும் நடிகர் பாபுவும் காலமான செய்தி மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த பாபு, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘என்னுயிர் தோழன்’ என்ற அரசியல் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த படத்தில் அவர், குடிசை வாழ் கட்சி ஊழியரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்குமிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, பாபு உயரமான பாறையில் இருந்து விழுந்ததில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். சமீபத்தில் கூட இயக்குனர் பாரதிராஜா அவரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, பண உதவியும் செய்தார்.

Published by
கெளதம்

Recent Posts

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

3 minutes ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

3 minutes ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

35 minutes ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

56 minutes ago

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

1 hour ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

2 hours ago