3 வரி.! 2 ஹைகூ.! 1 லட்சம் பரிசுத்தொகை.! இயக்குனர் லிங்குசாமி சூப்பர் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழ் கவிதை உலகில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர்களில் சமகால கவிஞர் கவிகோ அப்துல் ரகுமான். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவாக இயக்குனர் லிங்குசாமி ஒரு கவிதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

சிவகுமார் என்பவருடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. கவிகோ அப்துல் ரகுமான் மீது அதீத அன்பு கொண்ட லிங்குசாமி இந்த போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வித்தியாசம் கிடையது. யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். 3 வரிகள் மட்டுமே கொண்ட ஹைக்கூ வகை கவிதைகள் மட்டும் அனுப்ப வேண்டும். ஒரு நபர் 2 கவிதைகள் வரை அனுப்பலாம். kavikohaikupotti@gmail.com என்கிற இணையதள முகவரிக்கு போட்டியாளர்கள் தங்கள் ஹைக்கூ கவிதைகளை அனுப்பவேண்டும்.

நடுவர்கள் இறுதி முடிவு செய்து மார்ச் மாதம் அதன் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற போட்டியாளருக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

8 hours ago

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

11 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

12 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

13 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

16 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

16 hours ago