நடிகர் சிம்பு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் “சிம்பு சினி ஆர்ட்ஸ் ” எனும் பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அவர் நடித்த படங்கள், சிம்பு நடித்த ஆரம்பகால சில திரைப்படங்கள் என அனைத்தையும் அந்த நிறுவனம் தயாரித்தது.
அடுத்தாக சிம்பு ஒழுங்காக படங்களில் நடிக்காமல் இருந்ததால், அந்த நிறுவனம் பட தயாரிப்பதையும் நிறுத்தியது.இதனையடுத்து சிம்பு தற்போது சினிமாவில் மீண்டும் சரியாக நடிக்க வந்துவிட்டதால் சிம்பு “சிம்பு சினி ஆர்ட்ஸ் ” நிறுவனமும் பழையபடி படங்களை தயாரித்து வழங்க ஆரம்பித்துவிட்டது.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் “சிம்பு சினி ஆர்ட்ஸ்” நிறுவனம் விநியோகஸ்தராக களமிறங்குகிறது. அதன்படி, தற்போது இயக்குனரும்,நடிகருமான எஸ்ஜேசூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “கடமையை செய்”. இந்த படத்தின் திரையரங்கு உரிமத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தை வெங்கட் ராகவன் எனும் இயக்குனர் இயக்கி உள்ளார். யாஷிகாஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். மே மாதம் இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…