புதிய தோற்றத்தில் கலக்கும் சிறகடிக்க ஆசை குடும்பம்.. விஜயா ,முத்து வேற லெவல்..!

சிறகடிக்க ஆசை குடும்பத்தில் இன்றைக்கான [அக்டோபர் 23] எபிசோடில் மொத்தமாக பார்ட்டிக்கு தயாராகிய குடும்பம்..

Annamalai (10) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை குடும்பத்தில் இன்றைக்கான [அக்டோபர் 23] எபிசோடில் மொத்தமாக பார்ட்டிக்கு தயாராகிய குடும்பம்..

முத்துவின் காலில் விழும் மீனா ;

ரோகிணி மீனா கிட்ட நீங்க 50 கார் ஓனரோட பொண்டாட்டியா நடிக்கணும் அப்படின்னு சொல்ல.. ஸ்ருதி நீங்க ரெஸ்டாரன்ட் ஓனரோட பொண்டாட்டிய நடிக்கணும்னு சொல்றாங்க. இதை கேட்ட ஸ்ருதி  ஏங்க இவ்வளவு பொய் சொல்லி வச்சிருக்கீங்க.. அதுக்கு ரோகிணி சொல்றாங்க நாங்க சொல்லலைங்க மனோஜோட ஃப்ரெண்டு அப்படி சொல்லி வச்சிட்டாரு ..நம்ம குடும்பத்தோட நல்லதுக்காக நீங்க ரெண்டு பேரும் இந்த ஹெல்ப்ப  பண்ண மாட்டீங்களா அப்படின்னு கேக்குறாங்க. மீனா சொல்றாங்க பொய் சொல்றது ரொம்ப தப்புங்க என்னால எல்லாம் அப்படி நடிக்க முடியாதுன்னு சொல்றாங்க.

இப்போ மனோஜ் ரோகினிக்கு கால் பண்ணி முத்தும்  ரவியும் சம்மதிசுட்டாங்கனு சொல்ல இதைக் கேட்டு மீனாவும் சரி அவரே ஒத்துக்கிட்டதுனால நானும் சம்மதிக்கிறேன் சொல்றாங்க .சுருதி சொல்றாங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு எப்படி இருக்க போகுது எல்லாரும் எப்படி வர போறீங்கன்னு .இப்போ மீனா முத்து கிட்ட பால கொண்டு வந்து கொடுத்துட்டு உங்க கால காட்டுங்கன்னு சொல்லி ஆசிர்வாதம் வாங்குறாங்க நீங்க 50 காருக்கு ஓனராயிட்டீங்களா அப்படின்னு சொல்லிட்டு கிண்டல் அடிக்கிறாங்க. என்ன பண்றது மீனா ஏதோ பிசினஸ் யுக்தின்னு சொன்னா  கூட வேற பொறந்து  தொலைச்சுட்டான் பண்ணுவோமேன்னு தான் ஒத்துக்கிட்டேன் .ஆனா மாட்னா அவனுக்குத்தானே பூஜை நமக்கு என்னன்னு சொல்றாரு.

muthu,meena (25) (1) (1)

பார்ட்டியில் கலக்கும் குடும்பம் ;

இப்ப அடுத்த நாள் எல்லாருமே பார்ட்டிக்கு பிரம்மாண்டமா தயாராகி வராங்க. இதுல விஜயா வேற லெவல் லுக்குள்ள இருக்குறாங்க. அண்ணாமலை விஜயாவை சுத்தி சுத்தி பார்க்கிறார்.. முத்து மீனாவை தவிர எல்லாருமே இங்க இருக்கிறாங்க .இப்ப விஜயா கேக்குறாங்க அவங்க ரெண்டு பேரையும் காணோம் வரதுக்கு கூச்சப்பட்டுக்கிட்டு வராம போயிட்டாங்களோ என்னமோ அப்படின்னு சலிப்பா சொல்றாங்க .இந்த டைம்ல முத்து மீனா செம மாஸா  என்று குடுக்குறாங்க.. இதுல முத்து கோட் சூட் போட்டு பின்னாடி குடிமியெல்லாம் போட்டு பார்க்க பக்கா ட்ராவல்ஸ் ஓனர் மாதிரியே இருக்காரு.. எல்லாருமே முத்து மீனாவ வாய் அடிச்சு போய் பாத்துட்டு இருக்காங்க..

முத்து மீனாவும் செல்பி எடுத்துட்டு இருக்காங்க இத பாத்தா ரோகிணி இன்னைக்கு எப்படியாவது இந்த செல்லை எடுக்கனும்னு  வித்யா கிட்ட சொல்றாங்க. அப்போ மனோஜ்க்கு ஒரு கால் வருது சார் வந்துட்டீங்களா எங்க இருக்கீங்க அப்படின்னு பேசிகிட்டு செல்பி எடுத்துட்டு இருக்க முத்துவோட செல்ல தெரியாம தட்டி விடுறாரு..பதறி போயி வித்தியாவும்  ரோகிணியும் செல்லுக்கு என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க, அதுக்கு முத்து  ஒன்னும் ஆகல பின்னாடி நான் கவர் போட்டு இருக்கேன் அதுக்கு நீங்க ஏன் இவ்ளோ பதறிங்க அப்படின்னு கேக்குறாங்க ..இதோட இன்னைக்கு  எபிசோட  முடுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்