Categories: சினிமா

இரவு பொழுதில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி.!

Published by
கெளதம்

சென்னை பெருவெள்ளம் பொதுமக்களை புரட்டி போட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் நடிகர்கள் சிலரும் தற்போது களப்பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

புயல் வீசிய அடுத்த நாளே நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் தங்களால் முயன்ற நிதிகளை வழங்கினர். அதையும் தாண்டி நடிகர்கள் பார்த்திபன், KPY பாலா போன்றவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு பண உதவி மற்றும் உணவு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

அந்த வகையில், தற்பொழுது நடிகர் ஆதியும், அவரது மனைவி நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கினர். முன்னதாக, வெள்ளம் காரணமாக வீட்டை விட்டு வெளிவராமல் சிக்கி தவித்த மக்களுக்கு பகல் நேரங்களில் வீடு வீடாக சென்று உணவு வழங்கினர்.

ஆனால், புதுமண தம்பதிகளான ஆதி-நிக்கி கல்ராணி ஆகியோர் இரவு நேரங்களில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு பல இடங்களுக்கு சென்று உணவு வழங்கியது பாராட்டுகளை பெற்றுள்ளது.

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Recent Posts

ஆளுநர் விவகாரம்: ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ – முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…

19 minutes ago

சமையல் கியாஸ் விலையேற்றத்தை அரசு திரும்ப பெற வேண்டும்! விஜய் கண்டன அறிக்கை!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…

41 minutes ago

தமிழக ஆளுநரின் செயல்பாடு சட்டப்படி தவறானது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

2 hours ago

தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,

அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…

2 hours ago

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

3 hours ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago