Categories: சினிமா

இரவு பொழுதில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி.!

Published by
கெளதம்

சென்னை பெருவெள்ளம் பொதுமக்களை புரட்டி போட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் நடிகர்கள் சிலரும் தற்போது களப்பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

புயல் வீசிய அடுத்த நாளே நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் தங்களால் முயன்ற நிதிகளை வழங்கினர். அதையும் தாண்டி நடிகர்கள் பார்த்திபன், KPY பாலா போன்றவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு பண உதவி மற்றும் உணவு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

அந்த வகையில், தற்பொழுது நடிகர் ஆதியும், அவரது மனைவி நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கினர். முன்னதாக, வெள்ளம் காரணமாக வீட்டை விட்டு வெளிவராமல் சிக்கி தவித்த மக்களுக்கு பகல் நேரங்களில் வீடு வீடாக சென்று உணவு வழங்கினர்.

ஆனால், புதுமண தம்பதிகளான ஆதி-நிக்கி கல்ராணி ஆகியோர் இரவு நேரங்களில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு பல இடங்களுக்கு சென்று உணவு வழங்கியது பாராட்டுகளை பெற்றுள்ளது.

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago