கைதாகிறாரா சந்தானம்?! என்னவாகிறது ஏ.1 பட பிரச்சனை?

Default Image

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ஏ1 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் லோக்கல் பையனை காதலுக்கும் அய்யர் ஆத்து பெண், ஆப் ஆயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் காதலி , மயங்கி விழுந்த மாமா என பிராமணர்களை இழிவு படுத்தப்படுவதாக பல புகார் வெளியாகின.

திருச்சியில் இந்து தமிழர் கட்சியினர் போலீசில் இயக்குனர், மற்றும் ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பழனியை சேர்ந்த பிராமண சமூகத்தினரும் புகார்களை அடுக்கியுள்ளனர். இதனால் ஏ.1 ( அக்கியூஸ்ட் நம்பர் 1 ) ரிலீஸாகுமா, இல்லை படத்தின் ரிலீசிற்கு முன்னர் சந்தானம் கைது ஆகும் வரை பிரச்சனை போகுமா என கோலிவுட் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்