ரூ.45 ஆயிரத்தில் முழு நீள தமிழ் திரைப்படத்தை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்!

Published by
லீனா

இன்றைய நிலையில், ஒரு படம் இயக்குவதற்கு பல நூறு கோடிகள் செலவாகிறது. இந்த நிலையில், ஒரு இளைஞர் 45 ஆயிரம் செலவில், 1 மணி நேரம் 40 நிமிடம் ஓடக் கூடிய தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரத்தினகுமார் என்ற புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பெயர், ‘surveillance zone’. வெறும் ரூ.45 ஆயிரம் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் சுயாதீன தமிழ்ப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆகஸ்ட் 16-ம் தேதி டொராண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் இத்தாலி, பெர்லின், இஸ்ரேல், மியாமி, கொல்கத்தா போன்ற ஊர்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில், ஒரு கதையை CCTV footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இப்படமும் இருக்கும். மேலும் இப்படத்தில் இசை இல்லை. cctv-ல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் இதற்கு ஒளி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படம் Canon 550D மற்றும் Gopro கேமராவில் எடுக்கப்பட்டது.

மேலும், இப்படத்திற்கு டில்லியில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival-ல் இப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

36 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

41 mins ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

2 hours ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

3 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago