ரூ.45 ஆயிரத்தில் முழு நீள தமிழ் திரைப்படத்தை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்!

Published by
லீனா

இன்றைய நிலையில், ஒரு படம் இயக்குவதற்கு பல நூறு கோடிகள் செலவாகிறது. இந்த நிலையில், ஒரு இளைஞர் 45 ஆயிரம் செலவில், 1 மணி நேரம் 40 நிமிடம் ஓடக் கூடிய தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரத்தினகுமார் என்ற புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பெயர், ‘surveillance zone’. வெறும் ரூ.45 ஆயிரம் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் சுயாதீன தமிழ்ப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆகஸ்ட் 16-ம் தேதி டொராண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் இத்தாலி, பெர்லின், இஸ்ரேல், மியாமி, கொல்கத்தா போன்ற ஊர்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில், ஒரு கதையை CCTV footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இப்படமும் இருக்கும். மேலும் இப்படத்தில் இசை இல்லை. cctv-ல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் இதற்கு ஒளி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படம் Canon 550D மற்றும் Gopro கேமராவில் எடுக்கப்பட்டது.

மேலும், இப்படத்திற்கு டில்லியில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival-ல் இப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

5 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

42 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago