சினிமா

இமான் -சிவகார்த்திகேயன் விவகாரத்தில் புது திருப்பம்! மௌனம் கலைப்பாரா எஸ்கே?

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் சிவகார்திகேயன் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று சரியாக காரணம் தெரியவில்லை. ஒரு பேட்டியில் இருவருக்கும் என்ன பிரச்சனை உள்ளது என்பதை இமான் காரணத்தை தெரிவிக்காமல் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்ற மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு டி.இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசினார். சிவகார்த்திகேயன் நானும் இமானும் பிரிய கூடாது என்று விரும்பியதாகவும் இமான் நான் வேண்டாம் என்கிற முடிவில் இருந்ததாகவும் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிவார்த்திகேயனை பற்றி இப்படி பேசுகிறார் என மோனிகா கூறியிருந்தார்.

இதனையடுத்து, இமான் – மோனிகா விவாகரத்து பிரச்சனையில் தான் சிவகார்த்திகேயன் எதோ துரோகம் செய்துவிட்டதாக பலரும் தகவலை கிளப்ப தொடங்கினார்கள். இதனையடுத்து, இதில் புதிய திருப்பமாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய முதல் மனைவியான மோனிகாவை கடந்த  2020-ஆம் ஆண்டு தான் விவாகரத்து செய்தார்.

இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!

அதன்பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். எனவே, இதனை வைத்து பார்க்கையில், சிவகார்த்திகேயன் துரோகம் செய்தததாக கூறிய காரணத்தால்  விவாகரத்து ஆகி இருந்த எப்டி இமான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், டி இமான் பிரச்சனைக்கான காரணத்தை இன்னும் தெரிவிக்கவில்லை. அதைப்போலவே, சிவகார்த்திகேயனும் இதனை பற்றி பேசாமல் இருக்கிறார். எனவே, சிவகார்த்திகேயன் தனது  மௌனத்தை கலைத்து இந்த பிரச்சனை பற்றி விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Published by
பால முருகன்

Recent Posts

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

27 minutes ago

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

52 minutes ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

2 hours ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

3 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

3 hours ago